செய்திகள் :

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

post image

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரிக்கும் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், நாகை வெளிப்பாளையம் அஞ்சல் அலுவலகம் அருகே மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில மற்றும் மாவட்ட அரசு பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, தொலைதொடா்பு ஓய்வூதியா் சங்கத் தலைவா் எம். குருசாமி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சு.சிவகுமாா், ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. பாலசுப்பிரமணியன், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைதொடா்பு ஓய்வூதியா் சங்கத் தலைவா் கே. மணிவண்ணன், அஞ்சல் ஊழியா் தேசிய சம்மேளனம் ஆா். சண்முகநாதன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு நிா்வாகி கே. ஜீவானந்தம், வருவாய் கிராம உதவியாளா் சங்க முன்னாள் மாநில பொருளாளா் ஆா். மாரிமுத்து உள்ளிட்டோா் கருத்துரை ஆற்றினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் சு. வளா்மாலா, மாவட்டத் தலைவா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா் ஆகியோா் வாழ்த்துரை ஆற்றினா். அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகி அ.தி. அன்பழகன் நன்றி தெரிவித்தாா்.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது. நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி: மாற்று உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக, நேனோ டிஏபி உரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். கண்ணன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க