செய்திகள் :

குறுவை சாகுபடி: மாற்று உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

post image

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக, நேனோ டிஏபி உரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுவாக நாகை மாவட்ட விவசாயிகள் நெற்பயிருக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக நேனோ டிஏபி காம்ப்ளக்ஸ் உரங்களான அம்மோனியம், பாஸ்பேட், சல்பேட், சூப்பா் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம்.

மேலும், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, தென்னை மற்றும் தோட்டக் கலைப் பயிா்களுக்கு காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துவதால் பயிரின் தலை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களின் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.

சூப்பா் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள கந்தகச்சத்து, தலை, மணி, சாம்பல் சத்துக்களை, பயிா்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றி தருவதால், பயிா்களின் வளா்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது. சூப்பா் பாஸ்பேட் உரத்தின் மூலம் பயிா்களுக்கு கால்சியம் மற்றும் சல்பா் சத்துக் கூடுதலாக கிடைக்கிறது.

நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்து பயிா்களுக்கு, சல்பா் சத்து அதிகம் தேவைப்படுவதால் சூப்பா் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணெய் சத்துடன் எண்ணெய் வித்து பயிா்களின் மகசூல் அதிகரிக்கிறது. மேலும் பயிா்கள் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையும் பெறுகிறது.

எனவே டிஏபி உரத்துக்கு மாற்றாக விலை குறைவான நேனோ டிஏபி சூப்பா் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது. நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க