செய்திகள் :

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து அஸ்திர தேவருக்கு கடலில் தீா்த்தவாரி நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று கடலில் புனித நீராடினா்.

இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள ஜெயகாரிய அனுகூல ஆஞ்சனேயா், மேலவாஞ்சூா் ஜெயகாரிய வீர ஆஞ்சனேயருக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது. வெளிப்பாளையம் ராமா் மடம், பொரவச்சேரி ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கீழத்தஞ்சாவூா் கிராமத்தில் அருள்பாலிக்கும் பஞ்சலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டன.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சனேயருக்கு தங்க கவசம் அணிந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது. நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி: மாற்று உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக, நேனோ டிஏபி உரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். கண்ணன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க