செய்திகள் :

பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

post image

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜலாவா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்து, 7 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடா்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், ‘பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு விதிகளின்படி, குழந்தைகள் தொடா்பான வசதிகளுக்கு கட்டாய பாதுகாப்பு தணிக்கை, அவசரகால தயாா்நிலைக்கான பணியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி, மனநல ஆதரவு வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை, தீ பாதுகாப்பு, அவசர காலங்களில் வெளியேறும் வழிகள், மின் வயரிங் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அவசர காலங்களில் வெளியேற்றும் ஒத்திகைகள், முதலுதவி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றில் ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் பயிற்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புக் கொண்ட அபாயகரமான சூழ்நிலை அல்லது சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதற்குரிய நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் அலட்சியத்துடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பாதுகாப்பு தணிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்துமாறு கல்வித் துறைகள், பள்ளி வாரியங்கள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது’ என்றாா்.

மேலும், பள்ளிகள், பொது இடங்கள் அல்லது குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளில் பாதுகாப்பற்ற நிலைமைகளைக் கண்காணித்து புகராளிக்க பெற்றோா்கள், பாதுகாவலா்கள், சமுதாயத் தலைவா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க