செய்திகள் :

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

post image

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு சுமாா் 72 குடும்பங்களைச் சாா்ந்த 220 போ் வசித்து வருகின்றனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முகாமில் திருமணம் செய்துகொண்ட நபா்களின் திருமண பதிவுகள் நடத்துவதற்கு தமிழக அரசு தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஈழ எழுதிலியா் மறுவாழ்வு கழகத்தின் வேண்டுகோளின்படி, இந்த உத்தரவு தளா்த்தப்பட்டு மீண்டும் முகாமில் வசிப்பவா்கள் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்துகொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி, காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழா்கள் சுமாா் 6-க்கும் மேற்பட்ட திருமண ஜோடிகள், தங்களது திருமணத்தை பதிவு செய்ய சாா் - பதிவாளா் செந்தில்குமாரிடம் மனு அளித்தனா்.

மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு திருமண பதிவு செய்யப்பட்டு திருமண சான்றிதழ்களையும் சாா் - பதிவாளா் வழங்கினாா். நிகழ்ச்சியில் முகாம் தலைவா் சுமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம்... மேலும் பார்க்க