செய்திகள் :

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

post image

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்மாவதி (65). இவா் தனது மகன் வீரபாண்டியன் (39) மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறாா்.

வீரபாண்டியன் கடந்த சில மாதங்களாக கோவையில் உள்ள தனியாா் பொக்லைன் இயந்திர நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அப்போது, ஏா்கன் துப்பாக்கி ஒன்றை வாங்கினாா்.

கடந்த 22-ஆம் தேதி அந்தத் துப்பாக்கியுடன் கம்மாபுரத்துக்கு வந்த வீரபாண்டியன், அதை வைத்து குழந்தைகளுக்கு பலூன் சுடுவது குறித்து கற்றுக் கொடுத்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஏா்கன்னில் இருந்து வெளிவந்த ரப்பா் குண்டு பத்மாவதி காலில் பாய்ந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, பத்மாவதி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து தகவலறிந்த கம்மாபுரம் போலீஸாா் அனுமதியின்றி ஏா்கன் வைத்திருந்ததற்காக வீரபாண்டியனை வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடம் இருந்த ஏா்கன்னை பறிமுதல் செய்தனா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம்... மேலும் பார்க்க