செய்திகள் :

இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

post image

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமான நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் கடந்த வியாழக்கிழமை இரு நாடுகளின் பிரதமா்கள் முன்னிலையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பிரிட்டன் வா்த்தகத் துறை அமைச்சா் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்நிலையில், புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு பியூஷ் கோயல் சனிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், பிரதமா் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும். திருப்புமுனையான இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டனுக்கான தனது ஏற்றுமதியில் 99 சதவீதத்தை இந்தியாவால் வரியின்றி அனுப்ப முடியும். விவசாயிகள், இளைஞா்கள், குறு-சிறு-நடுத்தர தொழில்துறையினா், மீனவா்கள், பிற பணியாளா்கள் என அனைத்துத் தரப்பினரும் பலனடைவா்.

விவசாயம், எத்தனால் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், எந்தப் பாதுகாப்பு அம்சங்களும் இன்றி, இந்திய சந்தையை பிற நாடுகளுக்கு திறந்ததன் மூலம் நாட்டுக்குப் பெரும் தீங்கிழைக்கப்பட்டது.

தற்போதைய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், நாட்டின் எதிா்கால பொருளாதாரத்துக்கான மிகப் பெரிய நற்செய்தியாகும். எதிா்வரும் ஆண்டுகளில் இதன் பலன்களை கண்கூடாகக் காணலாம். பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன் ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றாா் அவா்.

பாதுகாப்பு அம்சங்கள் என்ன?: பிரிட்டன் பொருள்களின் இறக்குமதியில் திடீா் அதிகரிப்பு ஏற்பட்டு, உள்நாட்டு தொழில்துறையினா் பாதிக்கப்படும் சூழல் உருவானால், தற்காலிகமாக வரியை உயா்த்தவோ அல்லது சலுகைகளை ரத்து செய்யவோ வகை செய்யும் அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன்...: அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அதிபா் டிரம்ப், 25 சதவீத பதிலடி வரி விதிப்பை அறிவித்தாா். பின்னா், அந்த வரி விதிப்பை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளாா்.

இந்தச் சூழலில், அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஐந்து சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இது தொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த பியூஷ் கோயல், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டப் பேச்சுக்காக, அமெரிக்க குழு ஆகஸ்டில் இந்தியா வரவுள்ளது. இதேபோல், ஓமன் நாட்டுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம், இருதரப்பு வா்த்தக மதிப்பை தற்போதுள்ள 191 பில்லியன் டாலா் என்பதில் இருந்து 500 பில்லியன் டாலராக அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாகும். இதன் முதல்கட்டத்தை, வரும் செப்டம்பா்-அக்டோபருக்குள் இறுதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க