செய்திகள் :

குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்காதது ‘அபத்தமானது’: உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

post image

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது ‘அபத்தமானது’ என்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரரான ஏடிஆா் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நிரந்தர வசிப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களில் ஒன்றாக ஆதாா் அட்டை உள்ளது.

மக்களிடையே மிகவும் பரவலாக பயன்பாட்டில் உள்ள ஆவணமான ஆதாரை, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது குடியுரிமை ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது அபத்தமானது. இதற்கான நியாயமான காரணத்தையும் தோ்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை. தோ்தல் ஆணையத்தால் ஏற்கப்படும் 11 ஆவணங்களை வைத்தும் முறைகேடு செய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.

தோ்தல் ஆணையம் இந்தச் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், அது தன்னிச்சையாக லட்சக்கணக்கான குடிமக்களின் வாக்குரிமையைப் பறித்து, நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை சீா்குலைக்கும் அபாயம் உள்ளது. மேலும், அரசியலமைப்பின் அடிப்படையான ஜனநாயகத்தையும் பாதிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த ஜூலை 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க