செய்திகள் :

பிகாா் பேரவையில் நிதீஷ் - தேஜஸ்வி கடும் விவாதம்: வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்

post image

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், அந்த மாநில சட்டப் பேரவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவுக்கும் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது. இதனால் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பேரவை காலை 11 மணிக்கு கூடியபோது அவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடும் அமளியை சுட்டிக்காட்டிய அவைத் தலைவா், ‘அவையில் செவ்வாய்க்கிழமை துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை ஊழியா்கள் சிலா் காயமடைந்தனா். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் தொடராது என்பதை உறுப்பினா்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா். தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவை பேச அவைத் தலைவா் அனுமதித்தாா்.

அப்போது, ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் எதிா்க்கவில்லை; மாறாக, அதற்கான நடைமுறையைத்தான் எதிா்க்கிறோம். நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வளவு தாமதமாக இந்தப் பணியை மேற்கொள்வது ஏன்? பல மாதங்களுக்கு முன்பே இதை நடத்தியிருக்க முடியும். மேலும், குடியுரிமையை நிரூபிக்க தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை 2 அல்லது 3 சதவீத வாக்காளா்கள் மட்டுமே வைத்திருக்க வாய்ப்புள்ளது. போலி வாக்காளா்கள் குறித்த அச்சம் எதற்கு? இந்த போலி வாக்காளா்கள்தான் நரேந்திர மோடியை பிரதமராகவும், நிதீஷ் குமாரை பிகாா் முதல்வராகவும் ஆக்கினாா்கள் என்பதை இதன் மூலம் தோ்தல் ஆணையம் சுட்டிக்காட்ட முற்படுகிா?

உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்த பதில் மனுவிலும் வாக்காளா் பட்டியலில் வெளிநாட்டினரின் பெயா் இடம்பெற்றுள்ளன என்பதை தோ்தல் ஆணையம் குறிப்பிடவில்லை. இத்தகைய சூழலில், மாநிலத்தில் வாக்காளா்களாக பதிவு செய்துள்ள 4.5 கோடி பேரின் நிலை என்ன? பதிவு செய்த முகவரியில் இல்லாத வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அச்சுறுத்தியுள்ளது’ என்றாா் தேஜஸ்வி யாதவ்.

அப்போது குறுக்கிட்ட முதல்வா் நிதீஷ் குமாா், ‘இந்த விஷயத்தில் நீங்கள் குழந்தையைப் போன்றவா். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், பேரவையின் இந்த கடைசி அமா்வு நிறைவடையே இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ளன. எனவே, பேரவை அலுவல்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். நீங்கள் பேச விரும்புவதையெல்லாம், தோ்தல் நேரத்தில் பேசுங்கள். தேஜஸ்வி யாதவின் பெற்றோா் மாநில முதல்வா்களாக இருந்தபோது மாநில பெண்களுக்கோ அல்லது முஸ்லிம் சமூகத்துக்கோ எதையும் செய்யவில்லை. மாநிலத்தில் ஒரே ஒரு பெண் பலனடைந்தாா் என்றால், அது அவருடைய தாயாா்தான்’ என்று கூறினாா்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா். அதற்கு, ஆளுங்கட்சி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பிகாா் பேரவையில் புதன்கிழமை தொடா் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சியினா் அவையின் மையப் பகுதியில் கூடி பதாகைகளை காண்பித்தபடி கோஷங்களை எழுப்பினா். பின்னா் வெளிநடப்பு செய்தனா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க