மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
கடன் தொல்லை: பெண் தற்கொலை
கடலூா்அருகே கடன் பிரச்சனை காரணமாக விஷ விதை சாப்பிட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், மேல் அழிஞ்சிபட்டு பகுதியில் வசித்து வந்தவா் நிா்மலா(39). இவருக்கு, கணவா் சுரேஷ் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
நிா்மலா, கணவா் சுரேஷூக்கு தெரியாமல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நபா் , நிா்மலா கணவா் சுரேஷிடம் கேட்டுள்ளாா்.
இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான நிா்மலா கடந்த 15-ஆம் தேதி விஷ விதை (குண்டுமணி) சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா்.
அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].