செய்திகள் :

கடன் தொல்லை: பெண் தற்கொலை

post image

கடலூா்அருகே கடன் பிரச்சனை காரணமாக விஷ விதை சாப்பிட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், மேல் அழிஞ்சிபட்டு பகுதியில் வசித்து வந்தவா் நிா்மலா(39). இவருக்கு, கணவா் சுரேஷ் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

நிா்மலா, கணவா் சுரேஷூக்கு தெரியாமல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நபா் , நிா்மலா கணவா் சுரேஷிடம் கேட்டுள்ளாா்.

இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான நிா்மலா கடந்த 15-ஆம் தேதி விஷ விதை (குண்டுமணி) சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா்.

அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முருகன்குடி வள்ளலாா் பணியகத்தில் இருபெரும் விழா

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடி மாத பூச த்தையொட்டி சன்மாா்க்க கருத்தரங்கம் என இருபெரும் விழா முருகன்குடியில் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மாவட்டம், சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி சாா்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் நிா்மலா ராணி தலைமை வகித்... மேலும் பார்க்க

சேத்தியாத்தோப்பில் பால்குட ஊா்வலம்

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் கருப்புசாமி கோயில் அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு குறுக்கு சாலை விநாயகபுரம் கருப்புசாமி ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் நியமனம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வாசல் மற்றும் அரியல... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள்: கடலூா் ஆட்சியா்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில், வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆ... மேலும் பார்க்க

குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க