செய்திகள் :

``அவர்களின் விளையாட்டைப் புரிந்து கொண்டோம்" -52 லட்ச வாக்காளர் பெயர் நீக்கம் குறித்து ராகுல் காந்தி

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பீகாரில் நடந்துவரும் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்தப் பட்டியலுக்கு எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஸ்தம்பித்தது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பீகார் மாநிலத்தில் 52 இலட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதனால், இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``இது நீக்கப்பட்ட அந்த 52 இலட்ச மக்களைப் பற்றியது மட்டுமல்ல. மகாராஷ்டிராவிலும் (சட்டமன்றத் தேர்தல்) மோசடி செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலைக் கொடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். வீடியோகிராஃபியைக் காட்டுமாறு கேட்டோம், வீடியோகிராஃபி விதிகளை மாற்றினார்கள். மகாராஷ்டிராவில் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில், ஒரு பெரிய திருட்டை கண்டுபிடித்துள்ளோம்.

Rahul Gandhi - ராகுல் காந்தி
Rahul Gandhi - ராகுல் காந்தி

திருட்டு எப்படி நடக்கிறது என்பதை நான் தேர்தல் ஆணையத்திடம் தெளிவாகக் காண்பிப்பேன். அவர்களின் இந்த விளையாட்டு இப்போது எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் வாக்காளர்களை நீக்கிவிட்டதால், புதிய வாக்காளர் பட்டியலை கொண்டு வருவார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Bihar SIR: 52 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' மேற்கொள்ளப்படுகின்றது. ``தேர்தல் ஆ... மேலும் பார்க்க

Jagdeep Dhankhar: வழக்கறிஞர் டு குடியரசு துணைத்தலைவர் - ஜெகதீப் தன்கரின் அரசியல் பயணம் ஓர் பார்வை!

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் (ஜூலை 21) அறிவித்திருந்தார். உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினா... மேலும் பார்க்க

Health: நாம் ஏன் உலர் பழங்களைச் சாப்பிட வேண்டும் தெரியுமா?

பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்... மேலும் பார்க்க

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க