செய்திகள் :

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

post image

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சில தினங்களில் செயல்பட இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணி தொடங்கப்பட்டபோது, அதை வைத்து பணம் சம்பாதிக்க மோசடிக் கும்பல் திட்டமிட்டது.

அதன்படி, `ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். மத்திய அரசு நிறுவனம் என்பதால் கை நிறைய சம்பாதிக்கலாம். மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம். முதலில் வருபவர்களுக்குத்தான் முன்னுரிமை’ என்று அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு ஆசை காட்டிய அந்தக் கும்பல், அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் சுருட்டியது.

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி

போலி பணி ஆணை, ஐ.டி.கார்டு

அப்படி பணம் கொடுத்தவர்களுக்கு போலி பணி ஆணையுடன் ஜிப்மர் மருத்துவமனையின் ஐ.டி.கார்டையும் கொடுத்த அந்தக் கும்பல், வேலையில் சேரும் வரை இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கூறியிருக்கிறது.

மருத்துவமனை செயல்படும் நிலைக்கு வந்தபிறகும் நிர்வாகத்தில் இருந்து எந்த அழைப்பும் வராததால், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கொடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சரியான பதில் சொல்லாத அந்தக் கும்பல் அவர்களை மிரட்டியிருக்கிறது.

அதையடுத்து மோசடிக் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்த தட்சிணாமூர்த்தி, வாசுதேவன், தரணிஷ்குமார், மங்கையர்கரசி, சூசைமேரி உள்ளிட்டவர்கள் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்த விவகாரம் வெளியில் கசிந்தவுடன் மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள், தாங்களும் ஏமாற்றப்பட்டதாக புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் கோட்டுச்சேரி நீலமேகம், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விக்கி, ஜானகிராமன், திருநள்ளார் பகுதியைச் சேர்ந்த காயத்ரி உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மோசடி வழக்கில் கைதான விக்கி

`கல்வி உதவித் தொகை பெயரில் வெற்றுக்கவர்..'

அத்துடன் அவர்களிடம் இருந்து ஜிப்மர் மருத்துவமனையின் போலி ஐ.டி கார்டுகள், பணி ஆணைகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கும்பல் புதுச்சேரியில் மட்டுமல்லாமல் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``அரசு வேலை ஆசையில் இருக்கும் விளிம்பு நிலை மக்களை இந்த மோசடிக் கும்பல் குறி வைத்திருக்கிறது. அவர்களுக்கு சந்தேகம் வந்து பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர்களை மிரட்டியிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரான விக்கி என்பவர், தன்னை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் என்று காட்டிக் கொண்டு வலம் வந்தவர். கொள்ளையடித்த பணத்தில்தான் கடந்த ஆண்டு அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாளுக்கு புதுச்சேரி முழுக்க பேனர் வைத்தான்.

அது தவிர திடீர் சமூக சேவகராக மாறி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை தருகிறேன் என்று கூறி, அவர்களுக்கு வெற்று கவர்களை கொடுத்து ஏமாற்றியவன்” என்றனர்.

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம... மேலும் பார்க்க

Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 34. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த சில தினங்களாக உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருக்கிறது. அது மூலநோய் இல்லை என்பதுஉறுதி. டெயில்போன் வலியாகஇருக்கலாம் என்கிற... மேலும் பார்க்க