செய்திகள் :

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

post image

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலியின் ட்ரெண்டோவில் உள்ள மியூஸ் அறிவியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தாவரவியல் நிபுணர் ஆண்ட்ரியா பியான்சி மற்றும் தன்சானிய ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த மரத்தை கண்டறிந்தனர்.

மனித குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில், மேகமூட்டமான பள்ளத்தாக்குகளில் மறைந்திருந்த இந்த மரம், தாவரவியல் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டெஸ்மானியா பிரின்ஸெப்ஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த மரம், வெப்பமண்டலத்தில் மிக உயரமான மற்றும் பழமையான மரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

Tessmannia princeps

தற்போது இந்த அரிய இனத்தில் 100 முதிர்ந்த மரங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால், இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

4,200 முதல் 5,000 அடி உயரத்தில் உள்ள இரண்டு செங்குத்தான பள்ளத்தாக்குகளில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. வீழ்ந்த மரத்தை ஆய்வு செய்ததில், இது மிக மெதுவான வளர்ச்சி விகிதத்தைக் குறித்துள்ளது. இதன்படி இந்த மரங்களின் வயது 3,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். டெஸ்மானியா பிரின்ஸெப்ஸ் மரங்கள் 130 அடி உயரம் வரை வளரக்கூடியவையாக உள்ளது.

தான்சானியாவின் ஒரு மலைப்பகுதியில், அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதி, மனிதர்கள் அரிதாக பயணிக்கும் இடமாக இருப்பதால், இந்த மரங்கள் இதுவரை கவனிக்கப்படாமல் இருந்துள்ளன.

இந்த மரத்தின் இனத்தில் 1,000-க்கும் குறைவான மரங்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இவை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.

Tessmannia princeps

அருகிலுள்ள விவசாய நில விரிவாக்கம், பாதைகள் அமைப்பு மற்றும் தீ ஆபத்து ஆகியவை இதன் வாழிடத்தை அச்சுறுத்துகின்றன. இந்த மரத்தின் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், அதன் குறைந்த எண்ணிக்கையை பாதுகாக்கவும் உடனடி சுற்றுச்சூழல் ஆய்வுகள் தேவை என பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த மரங்கள் புவி வெப்பமயமாதல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த ஆய்வுகளுக்கு புதிய புரிதலை அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம... மேலும் பார்க்க

Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 34. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த சில தினங்களாக உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருக்கிறது. அது மூலநோய் இல்லை என்பதுஉறுதி. டெயில்போன் வலியாகஇருக்கலாம் என்கிற... மேலும் பார்க்க