செய்திகள் :

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

post image

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும் இந்த இரண்டாம் கட்ட சீசனுக்கு வட மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவது வாடிக்கையாக இருக்கிறது.

மலர் நாற்றுகள் நடவு

தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படும் பூங்காக்களில் மலர் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு மலர் நாற்று நடவு பணிகளை இன்று காலை தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்த இரண்டாம் கட்ட சீசனுக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகின்றன.

தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகள் குறித்து தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகிகள், "எதிர் வரும் இரண்டாம் கட்ட சீசனுக்காக கொல்கத்தா, காஷ்மீர்‌, பஞ்சாப்‌, புனே போன்ற இடங்களிலிருந்து இன்கா மேரி கோல்டு, ஃபிரெஞச்‌ மேரிகோல்டு, ஆஸ்டர்‌, வெர்பினா, காஸ்மோஸ்‌, ஸ்வீட்‌ லில்லியம்‌, கிரைசாந்திமம்‌, கேலண்டுலா உள்ளிட்ட 60 வகையான மலர்களின் விதைகள் பெறப்பட்டுள்ளது. சுமார்‌ 5 லட்சத்திற்கும் அதிகமான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

மலர் நாற்றுகள் நடவு

இதுதவிர, 15 ஆயிரம் பூந்தொட்டிகளில்‌ சால்வியா, டெய்சி, டெல்ஃபினியம்‌, டேலியா, ஆந்தூரியம்‌, கேலா லில்லி போன்ற 30 வகையான மலர்ச்செடிகள்‌ நடவுப்‌ பணியும் தொடங்கியிருக்கிறது. இரண்டாவது சீசனைக் கண்டு ரசிக்க சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான மலர் செடிகள் ஒட்டுமொத்தமாக பூத்து, பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது " என்றனர்.

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம... மேலும் பார்க்க

Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 34. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த சில தினங்களாக உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருக்கிறது. அது மூலநோய் இல்லை என்பதுஉறுதி. டெயில்போன் வலியாகஇருக்கலாம் என்கிற... மேலும் பார்க்க