செய்திகள் :

தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து முடிவு: தமிழிசை பேட்டி

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் கலந்துபேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:

"அரசு செலவில் பல கோடி ரூபாயை திமுக தமது தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதுபோல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் உள்ளது. கடந்த 4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாகக் கூறுகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை அறிய முடிகிறது. தவிர, மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை என்பது வேதனை அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருவதை மிகப்பெருமையாக கருதுகிறோம். கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமையை உணர்த்த பிரதமர் வர வேண்டி உள்ளது. பிரதமர் வருகை பாஜகவினருக்கு புத்துணர்ச்சி தரும்.

காமராஜர் உள்பட அனைத்து தலைவர்களும் இகழப்பட வேண்டும் என்பதும் கருணாநிதியை மட்டுமே பெருமையாகக் கருத வேண்டும் என்பதுதான் திமுகவினர் நோக்கம்.

சீமான், விஜய் ஆகியோரை கூட்டணிக்கு அழைப்பது எடப்பாடி பழனிச்சாமியின் நிலைபாடு. பாஜக, அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.

ஆனால் திமுக கூட்டணிதான் தெளிவில்லை. திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கம்யூனிஸ்ட் தலைவர்கள் திமுக கூட்டணியில் தங்களுக்கு எத்தனை இடம் வேண்டும் என இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.

குரூப் 4 தேர்வில் குளறுபடி இருப்பதாக அதிமுகபோல் பாஜகவுக்கும் கருத்து உள்ளது. தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

துணை குடியரசுத்தலைவர் ராஜிநாமா குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர் அடுத்த துணை குடியரசுத்தலைவராக வர வாய்ப்புள்ளதா என கூறக்கூடிய இடத்தில் நான் இல்லை" என்றார்.

Tamilisai Soundararajan has said that Amit Shah and Edappadi Palaniswami will discuss and decide on a coalition government after the Tamil Nadu Assembly elections.

மருத்துவமனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ஆக. 2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1,556 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், சென்னையில் மட்டு... மேலும் பார்க்க

சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?

சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாய... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நிலையில் ம... மேலும் பார்க்க