செய்திகள் :

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

post image

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணியாற்றினர்.

மொத்தம் 2,400 பேர் அவ்வாறு பணியாற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேவேளையில், பொது மக்களுக்கான மருத்துவ சேவைகளில் எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர் சங்கத்தினர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர் பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாக 2,400 பேர் நியமிக்கப்பட்டோம்.

பெருந்தொற்று காலங்களிலும், நோய்த் தொற்று பரவும் நேரங்களிலும் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களை நியமனம் செய்தபோது ஆய்வக நுட்பநராக தகுதி பெற சிஎம்எல்டி எனப்படும் ஓராண்டு கல்வி திட்டம் மட்டுமே இருந்தது. அதன் பின்னரே டிஎம்எல்டி எனப்படும் இரு ஆண்டு படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், சிஎம்எல்டி படிப்பை பயின்ற எங்கள் அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. டிஎம்எல்டி படித்திருந்தால் மட்டுமே இரண்டாம் நிலை ஆய்வக நுட்பநர்களாக பதவி உயர்வு பெற முடியும் எனக் கூறியுள்ளது. எங்களது காலத்தில் இல்லாத ஒரு படிப்பை நாங்கள் எவ்வாறு கற்க முடியும்?

பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தின் இந்த முடிவு எங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது மட்டுமன்றி 2,400 பேரும் பதவி உயர்வே இல்லாமல் பணி ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வு அளிக்க வேண்டும் என்றனர்.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெறும் 6 வாா்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதவரம் மண்டலம் 24-ஆவது வாா்டு புனித அந்தோணியாா் நகரில் தியா திருமண மண்டபம், தண்டை... மேலும் பார்க்க