செய்திகள் :

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

post image

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், விசாரணைக்கு ஆஜராகும்படி அசோக்குமாருக்கு 9 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவா் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அசோக்குமாா் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் அமெரிக்காவில் எதுவும் இருக்கின்றனவா என கேள்வி எழுப்பினா். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் விவரங்கள், விமான பயணச்சீட்டு, தங்குமிடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெறும் 6 வாா்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதவரம் மண்டலம் 24-ஆவது வாா்டு புனித அந்தோணியாா் நகரில் தியா திருமண மண்டபம், தண்டை... மேலும் பார்க்க