செய்திகள் :

வெற்றியை தந்தைக்குச் சமர்ப்பித்த ஹர்மன்ப்ரீத்..! ஒரே போட்டியில் பல சாதனைகள்!

post image

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து மகளிருக்கு எதிராக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரையும் வென்று சாதனை படைத்திருந்த நிலையில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தினார்கள்.

இந்தப் போட்டியில் சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்த விருதை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீராங்கனை கிராந்தி காட்டுடன் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 சதமடித்த முதல் வீராங்கனை

இங்கிலாந்தில் ஒரு வெளிநாட்டு வீராங்கனை 3 சதங்கள் அடித்தது இதுவே முதல்முறை. இந்தச் சாதனைக்கு சொந்தக்காரியாக நமது மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

4,000 ரன்கள் கடந்த 3-ஆவது இந்தியர்

ஹர்மன்ப்ரீத் கௌர் ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இவருக்கு முன்பாக மிதாலி ராஜ் 7,805 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 4,588 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியதாவது:

அணியினர் அனைவருக்குமே இது நல்ல தருணங்களாக இருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். டபிள்யூபிஎல் தொடரில் பெற்ற அனுபவம் கிராந்தி, ஸ்ரீ சரணிக்கு உதவின. மேலும், ஃபீல்டிங் பயிற்சியாளருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது.

இந்த வெற்றி எங்கள் அனைவருக்குமே முக்கியமானது. இந்த சிறப்பான ஆட்டத்தை நான் எனது தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் இந்த மாதிரியான ஆட்டத்துக்காக காத்திருந்தார்.

கடினமாக உழைத்தது சரியான நேரத்தில் கைகொடுத்தது. முதலில் சிறிது அழுத்தம் இருந்தது. தீப்தி முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுப்பார். உலகக் கோப்பைக்கு இந்தப் போட்டிகள் மிகவும் உதவுகின்றன என்றார்.

Indian women's team captain Harmanpreet Kaur has achieved several feats in a single match.

1974-க்குப் பிறகு... இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைத்த ஜெய்ஸ்வால்!

இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார். மான்செஸ்டரில் இன்று தொடங்கிய 4-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.மதிய உணவு இட... மேலும் பார்க்க

ஏன் இந்த அநீதி? 3 ஆண்டாக அணியில் இருந்தும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு!

அபிமன்யூ ஈஸ்வரன் கடந்த 2022 முதல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள் அசத்திய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ ... மேலும் பார்க்க

பிரேக்கிங் பேட்: கிறிஸ் ஓக்ஸ் வீசிய பந்தில் உடைந்த ஜெஸ்வாலின் பேட்!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் விளையாடும்போது இந்திய வீரர் யஷஸ்வி ஜெஸ்வாலின் பேட் உடைந்த விடியோ வைரலாகி வருகிறது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.மான்செஸ்டரில் இன... மேலும் பார்க்க

விராட் கோலியை முந்திய கே.எல்.ராகுல்..! வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி விக்கெட் இழக்காமல் வலுவான நிலையில் இருக்கிறது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.மான்செஸ்டரில் இன்று தொட... மேலும் பார்க்க

யார் இந்த அன்ஷுல் கம்போஜ்? ரஞ்சியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்!

இந்திய டெஸ்ட் அணியில் 318-ஆவது நபராக அறிமுகமாகியுள்ள இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் (24 வயது) மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் கடந்... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக 100-ஆவது போட்டியில் முகமது சிராஜ்..! பணிச் சுமையற்ற வீரர்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது 100-ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது. தற்போது, மான்செஸ்டரில் 4-ஆவ... மேலும் பார்க்க