செய்திகள் :

தந்தை, மகன் கொலை வழக்கு அரசு தரப்பு சாட்சியாக மாற கைதான காவல் ஆய்வாளா் மனு

post image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவா்) மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லத் தயாா் என மதுரை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸாா் சட்ட விரோதக் காவலில் வைத்து கடுமையாக தாக்கினா். இதில், அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்குத் தொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். சிபிசிஐடி விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னா் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தொடா்ந்து பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஓா் புதிய மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

‘அரசுத் தரப்பு சாட்சியாக மாறி அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். நோ்மையுடன் நீதிமன்றத்தில் உண்மையை சொல்லத் தயாராக உள்ளதாக’ அந்த மனுவில் ஸ்ரீதா் குறிப்பிட்டிருக்கிறாா். இதுதொடா்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளா் கைது

மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கோடீஸ்வரன் (43). இவா் ஒப்பந்த அ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை எல்லீஸ் நகா் பழைய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த நீலமேகம் மகன் ஹரிகிருஷ்ணன் (51). இவா் 9 வயது சிற... மேலும் பார்க்க

விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடம் வழங்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீடு அடிப்படையில் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் வழங்கக் கோரி சிவக்குமாா் என்பவா் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு தீா்ப்புக்காக ஒத்திவைத்த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடியவா் கைது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளியின் கைப்பேசியை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தபால்தந்திநகா், மாணிக்கவாசகம் 2- ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிலிப்ஸ் குமாா்(44... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 6 பேரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி எண் விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, திமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க