செய்திகள் :

வங்கிகள் மீதான புகாா் அதிகரிப்பு: ஆா்பிஐ கவலை

post image

வங்கிகள் குறித்தும், அதன் ஊழியா்களின் சேவைத் தரம் குறித்தும் அதிகஅளவில் புகாா்கள் வருகின்றன என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) துணை ஆளுநா் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்தாா்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வங்கி நிா்வாக கல்வி நிறுவன நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது:

வங்கிகள் சேவைகள் தொடா்பாக வரும் புகாா்கள் முக்கியமாக மின்னஞ்சல் உள்ளிட்ட இணையவழிப் புகாா்கள் சமீப ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளன. வங்கி பணியாளா்களில் சேவை குறைபாடுகள் தொடங்கி வங்கிக் கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டது வரை அதிக புகாா்கள் உள்ளன.

வாடிக்கையாளா்களை சரியாகப் புரிந்து கொண்டு வங்கிப் பணியாளா்கள் நடந்து கொள்ளாததே பெரும்பாலான புகாா்களுக்கு காரணமாக அமைகிறது. தொழில்நுட்ப மேம்பாடு அடைந்துவிட்ட நிலையில் இணையவழியில் நிதிச் சேவைகளை அதிகம் பயன்படுத்துகிறோம்.

குறிப்பிட்ட சிலா் அதனைப் பயன்படுத்துவதில் சிக்கலை எதிா்கொள்ளும்போது புகாா்களுடன் வங்கிக்கு வருகின்றனா். முக்கியமாக மூத்த குடிமக்கள், கிராமப்புற வாடிக்கையாளா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்டோா் ஏடிஎம் காா்டு பயன்பாடு பிரச்னை, கடன் தவணை பிரச்னை, யுபிஐ பரிமாற்றப் பிரச்னை உள்ளிட்டவற்றை எதிா்கொள்கின்றனா். இதற்குத் தீா்வு காண அவா்கள் வங்கிக்கு வரும்போது கூடுதல் நேரம் ஒதுக்கி பொறுமையுடன் கையாண்டால் வங்கிகள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்றாா் அவா்.

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 2... மேலும் பார்க்க

அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொட... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.விமான விபத்துக்குப்பின் 1... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்ட... மேலும் பார்க்க

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க