செய்திகள் :

ராஜஸ்தான்: பள்ளிக்கட்டிடம் இடிந்து 4 குழந்தைகள் பலி; இடிபாடுகளில் 17 பேர் காயம்.. என்ன நடந்தது?

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹர் பிப்லோதி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அரசு பள்ளிக்கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது 40 மாணவர்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கட்டிடத்திற்குள் இருந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இன்று காலை பள்ளி தொடங்கி மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதை பார்த்த உள்ளூர் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது வரை 4 குழந்தைகள் இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. 17 குழந்தைகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அமித் குமார் தெரிவித்துள்ளார். 4 ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

மாநில கல்வி அமைச்சர் மதன் இது தொடர்பாக அளித்த பேட்டியில்,''காயம் அடைந்த குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை கொடுக்க ஜில்லா பரிஷத் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறேன். சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

இடிந்து விழுந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இது தொடர்பாக அக்கிராம மக்கள் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சில நாள்களாக ராஜஸ்தானில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

முதுகுளத்தூர்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி; ரேஷன் பொருள்கள் வாங்கி வரும் போது நடந்த சோகம்..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கூவர் கூட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாத நிலையில் அருகில் உள்ள சின்ன பொதிகுளம் கிராமத... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி: திடீரெனப் பரவிய காட்டுத்தீ; தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்த... மேலும் பார்க்க

Russia விமான விபத்து: ஒட்டுமொத்தமாக 49 பேர் உயிரிழப்பு - விபத்துக்கான காரணம் என்ன?

கடந்த திங்கள்கிழமை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 49 பயணிகளுடன் சென்ற விமானம் சீன எல்லை அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் ரஷ்ய ... மேலும் பார்க்க

நீலகிரி: 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; விபரீதத்தில் முடிந்த வழுக்கு மரம் போட்டி!

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் அமைந்திருக்கிறது மேல் பாரதி நகர். ஊரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பாரம்பர்ய சாகச போட்டிகளில் ஒன்றான வழ... மேலும் பார்க்க

கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..

யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டே... மேலும் பார்க்க

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. நியூயார்க்கின்... மேலும் பார்க்க