செய்திகள் :

நீலகிரி: 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; விபரீதத்தில் முடிந்த வழுக்கு மரம் போட்டி!

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் அருகில் அமைந்திருக்கிறது மேல் பாரதி நகர். ஊரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பாரம்பர்ய சாகச போட்டிகளில் ஒன்றான வழுக்கு மரம் ஏறும் போட்டியினை நேற்றிரவு நடத்தியிருக்கிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வழுக்கு மரம் ஏற முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்கிற இளைஞர் தொடர்ந்து முயற்சி செய்து வழுக்கு மரத்தின் உச்சியை அடைந்திருக்கிறார்.

வழுக்கு மரம்

சாகச போட்டியில் குருமூர்த்தி வெற்றியடைந்ததைக் கண்ட மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்திருக்கிறார்கள். அடுத்த சில வினாடிகளில் 60 அடி உயர வழுக்கு மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறார் குருமூர்த்தி. படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோயில் திருவிழாவில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டி விபரீதத்தில் முடிந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வழுக்கு மரத்தின் உச்சியில் இருந்து இளைஞர் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.

கூடலூர்: யானை மிதித்து உயிரிழந்த தொழிலாளி; யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் பலியாகும் அப்பாவிகள்..

யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் மேலும் ஒரு உயிர் பறிபோயிருக்கும் துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டே... மேலும் பார்க்க

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. நியூயார்க்கின்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி... 3 பேர் படுகாயம் - சிவகாசியில் தொடரும் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவு... மேலும் பார்க்க

வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது.வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 ... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுகள் கோமாவில் வாழ்வு; செளதி அரேபியா இளவரசர் அல் வகீத் காலமானார்..

'ஸ்லீப்பிங் பிரின்ஸ்' என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமாகியிருக்கிறார். கடந்த இருபது வருடங்களாக அவர் கோமா நிலையில் இருந்தார். ஒரு கார் விபத்தினால்தான் அவர் கோமா நிலைக்க... மேலும் பார்க்க

நீலகிரி: மின் கம்பத்தின் கீழ் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் சிறுத்தை; வனத்துறை சொல்வது என்ன?

சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலகிரி வனக்கோட்டத்தில் மேலும் ஒரு பெண் சிறுத்தையின் பரிதாப இழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்... மேலும் பார்க்க