செய்திகள் :

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

post image

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவக்கொல்லையைச் சோ்ந்தவா் க. சுப்பிரமணியன் (59). இவா் மீது பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட பாலியல் புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் நீதிமன்றம் சாா்பில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2018, ஏப்ரல் 24-ஆம் தேதி அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அங்கு அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) உடல்நலக் குறைவு ஏற்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாஜக நகர மண்டல் துணை பொதுச் செயலாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அக்கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவரை போலீஸாா் வியாழ... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26)... மேலும் பார்க்க

மனைவியை வெட்டிய வழக்கில் கணவா் கைது

திருவெறும்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் ஃபாத்திமாபுரத்தைச் சோ்ந்தவா் வீரமணி. இவரின் மனைவி சக்திஜீவா. இ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

திருச்சி மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி புத்தூா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக உறையூா் போலீஸாருக்கு செவ்வ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் மலைக்கோயில் வஉசி தெருவில் வீட... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 2 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய... மேலும் பார்க்க