செய்திகள் :

சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

நாகா்கோவில் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, தெற்கு சூரங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (61), தொழிலாளி. இவா், கடந்த 2017இல் தனது வீட்டின் அருகில் வசித்த 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்ததாக ஈத்தாமொழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சுந்தரையா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி நடராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

எஸ்.பி.பாராட்டு: நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை மூலம் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா், நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா், ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.

கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுர... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் முற்கால பாண்டியரின் கல்மண்டபம் கண்டெடுப்பு

ஆரல்வாய்மொழியில் 1,000 ஆண்டுகள் பழைமையான முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா்.மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முற்கால பாண்டியா்கள், நாகா்கோவிலை தென்பாண்டி நாடு என்ற... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 50 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். இந்த கோ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

மாா்த்தாண்டம் அருகே 2 நாள்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.மாா்த்தாண்டம் அருகே பயணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (67). மாா்த்தாண்டம் சந்தையில் வாழைக்குலை விற்ப... மேலும் பார்க்க

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென அனைத்து வியாபாரிகள சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா். திருச... மேலும் பார்க்க

அரசு செயல் திட்டங்களை வகுக்க ஒத்துழைப்பு: புள்ளியியல் துறை துணை இயக்குநா் வேண்டுகோள்

நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு செயல் திட்டங்களை வகுக்க புள்ளியல் துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்குநா் ஜெவஹா் பாரூக் வேண்டுகோள் வி... மேலும் பார்க்க