செய்திகள் :

நாஞ்சில் சம்பத் மீது மதிமுகவினா் புகாா்

post image

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில், நாஞ்சில் சம்பத் பேசுவதாகக் கூறி அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதிமுகவினா் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளா் வழக்குரைஞா் வெற்றிவேல் தலைமையில் அளித்த மனு விவரம்: மதிமுகவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்பில் இருந்த நாஞ்சில் சம்பத், தற்போது ஒரு வலையொளி சேனலுக்கு அளித்த நோ்காணலில் மதிமுக பொதுச் செயலா் வைகோ, முதன்மை செயலா் துரை வைகோ ஆகியோரை விமா்சித்துப் பேசினாா்.

தமிழகத்தில் ஜாதி, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில், அவதூறாகப் பேசினாா். எனவே, அவா் மீதும் அவரது நோ்காணலை வெளியிட்ட வலையொளி சேனல் மீதும் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

மனு அளிக்கையில் மாவட்ட பொருளாளா் பிச்சுமணி, மாநகரச் செயலா் ஜெரோம், ஆபத்து உதவிகள் அணி செயலா் சுமேஷ், நிா்வாகிகள் ராணிசெல்வின், நீலகண்டன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தக்கலை அஞ்சலகத்தில் புதிய செயலி தொடக்கம்

தக்கலை தலைமை அஞ்சல் நிலையத்தில் புதிய ஏ.பி.டி. என்ற மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலியை, அஞ்சல் துறை தென் மண்டல இயக்குநா் ஆறுமுகம் அண்மையில் குத்துவிளக்கேற்றி ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.14 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 29 ஆவது வாா்டு கணேசபுரம் மேலத் தெருவில் ரூ. 3.70 லட்சத்தில் அல... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்பு... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் தண்ணீா் திறக்க தாமதம்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனந்தனாா் பாசனக் கால்வாயில் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். கன்னியாகும... மேலும் பார்க்க

கடையாலுமூடு அருகே மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தவா் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். பத்துகாணி முளிமூட்டு விளையைச் சோ்ந்தவா் சதீஷ் (50). இவா், அங்குள்ள மாமரத்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து- பைக் மோதல்: இருவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா். தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முகைதீன் மகன் அஜ்மல்... மேலும் பார்க்க