செய்திகள் :

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி... 3 பேர் படுகாயம் - சிவகாசியில் தொடரும் சோகம்!

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பட்டாசு என்றால் வான வேடிக்கைகள், சத்தம், மாசு என்கின்றவற்றையெல்லாம் தாண்டி வெடி விபத்து என்ற சோகக்கதையும் இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் சாலையில் மாரியம்மாள் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இதில் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு( பெசோ) உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது.

புகை மண்டலமாக காட்சி அளித்த பகுதி

இந்நிலையில் மாலை பட்டாசு ஆலையில் மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு துறையினர், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிவகாசியை சேர்ந்த கார்த்திகேயன் (21), சங்கீதா (45) லட்சுமி (48) ஆகிய மூன்று தொழிலாளர்கள் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த மாரியம்மாள், (50), நாகலட்சுமி, (55) மாரியம்மாள் (47) ஆகிய மூன்று தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை போர் மேன் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது.வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 ... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுகள் கோமாவில் வாழ்வு; செளதி அரேபியா இளவரசர் அல் வகீத் காலமானார்..

'ஸ்லீப்பிங் பிரின்ஸ்' என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமாகியிருக்கிறார். கடந்த இருபது வருடங்களாக அவர் கோமா நிலையில் இருந்தார். ஒரு கார் விபத்தினால்தான் அவர் கோமா நிலைக்க... மேலும் பார்க்க

நீலகிரி: மின் கம்பத்தின் கீழ் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் சிறுத்தை; வனத்துறை சொல்வது என்ன?

சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலகிரி வனக்கோட்டத்தில் மேலும் ஒரு பெண் சிறுத்தையின் பரிதாப இழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்... மேலும் பார்க்க

பள்ளி சைக்கிள் ஷெட் மீது விழுந்த காலணி; எடுக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி.. கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வலியபாடத்தைச் சேர்ந்த மனு என்பவரது மகன் மிதுன்(13). தேவலக்கரை பகுதியில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். நேற்று பள்ளிக்குச் சென்றபோது மாணவ... மேலும் பார்க்க

விருதுநகர்: செவல்பட்டி பட்டாசு ஆலை விபத்து; கழிவு வெடிகள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு வெம்பக்கோட்டை அருகில் உள்ள செவல்பட்டியில் சரவணா பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.மாவட்ட வருவாய் அலுவ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”கனவாக இருக்கக் கூடாதா..?”- கதறித் துடிக்கும் பெற்றோர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 கு... மேலும் பார்க்க