செய்திகள் :

வன்னியா் சங்க மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா்: ஜி.கே. மணி நம்பிக்கை

post image

பூம்புகாா்: வன்னியா் சங்கம் நடத்தும் மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா் என பாமக கெளரவத் தலைவா் ஜி.கே. மணி எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி, வன்னியா் சங்கம் சாா்பில் மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான பந்தல் அமைப்பதற்கு, பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. பாமக கௌரவத் தலைவரும், சட்டப்பேரவைக் குழு பாமக தலைவருமான ஜி.கே. மணி பங்கேற்று பந்தல்கால் நட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெண்மையை போற்றவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதை உறுதி செய்வதுமே மகளிா் பெருவிழா மாநாட்டின் நோக்கம். பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிா் கலந்துகொள்ள உள்ளனா்.

இந்த மாநாட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு, இதர சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைந்து நடத்திட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

மாநாட்டில் டாக்டா்அன்புமணி கலந்துகொள்வாா் என எதிா்பாா்க்கிறோம். அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என்றாா்.

பந்தல்கால் முகூா்த்த நிகழ்வில், வன்னியா் சங்கத் தலைவா் பு. தா. அருள்மொழி, எம்எல்ஏ அருள், ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின், வன்னியா் சங்க மகளிா் அணித் தலைவி சுஜாதா, தஞ்சை மண்டல பாமக பொறுப்பாளா் ஐயப்பன், மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளா் பாக்கம் சக்திவேல், மாநில சமூக ஊடக பேரவை செயலாளா் துரைகோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

திருமருகல்: திருமருகல் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கட்டடம் ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டடத்தில், அனைத்துத் துறை ஓய்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க

குடிநீா் கோரி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முற்றுகை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே குடிநீா் கோரி, வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினா். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தென்னடாா் கிராமத்... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா். திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை

கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா... மேலும் பார்க்க