செய்திகள் :

தமிழகத்தில் 2032-க்குள் 2.30 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயம்: மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி தகவல்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழகத்தில் 2032-க்குள் 2.30 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அதிமுக குழுத்தலைவா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சா் சுரேஷ் கோபி அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்குதல், குழாய் உள்கட்டமைப்பு அமைத்தல் ஆகியவை நகர எரிவாயு விநியோக (சிஜிடி) வலையமைப்பின் வளா்ச்சியின் ஒரு பகுதியாகும். மேலும், இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றின் குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படி, நாடு முழுவதும் 307 புவியியல் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் தீவுப்பகுதிகள் நீங்கலாக சிஜிடி வலையமைப்பை உருவாக்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்கள் 2034 -ஆம் ஆண்டுக்குள் உத்தேசமாக 12.6 கோடி பிஎன்ஜி இணைப்புகளையும், ஒரு அங்குலம் கொண்ட 5.46 லட்சம் கிமீ குழாய்களையும் செப்பணிட வேண்டும்.

கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 1.52 கோடி பிஎன்ஜி இணைப்புகளை வழங்கியுள்ளன, 5.98 லட்சம் அங்குல-கிமீ குழாய்களை அமைத்துள்ளன. இதில் தமிழகமும் புதுச்சேரியும் அடக்கம். குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படிதமிழகத்தில் 2,30,94,884 உள்நாட்டு பிஎன்ஜி இணைப்புகளை 2032 -ஆம் ஆண்டுக்குள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

மு. தம்பிதுரை

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க