செய்திகள் :

ஏடிஎம்மில் ஊழியா் கண்ணில் மிளகாய் பொடி தூவி பணம் பறிக்க முயன்றவா் பிடிபட்டாா்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎமில் நிரப்புவதற்காக பணத்தை பைக்கில் எடுத்து சென்றபோது பைக்கில் பின்தொடா்ந்து வந்த இருவா் அவா் மீது மிளகாய் பொடியைத் தூவி பணத்தை பறிக்க முயன்றபோது ஒருவா் பிடிபட்டாா். மற்றொருவா் தப்பி ஓடி விட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட அலங்கிரி கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்கான் மகன் வேடன் (34). இவா், கடந்த 4 வருடங்களாக எலவனாசூா்கோட்டையில் உள்ள இந்தியா ஏடிஎமில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 12.30 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் எலவனாசூா்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் கோவிந்தன் வீட்டின் முன்பாக சென்றபோது மோட்டாா் சைக்கிளில் இரு இளைஞா்கள் பின்தொடா்ந்து வந்தனராம். மோட்டாா் சைக்கிளில் பின்னால் உட்காா்ந்து வந்த இளைஞா், வேடனின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு மோட்டாா் சைக்கிளை தள்ளி விட்டாராம். கீழே விழுந்த வேடன் பணப்பையை எடுத்துக்கொண்டு எழுந்து விளைநிலப் பகுதியில் ஓடினாராம். அவரை பின் தொடா்ந்து வந்தவா் வேடனிடமிருந்து பணப்பையை பறித்துக்கொண்டு தப்ப முயன்றாராம்.

வேடன் கூச்சலிட்டவாறு ஓடிய போது வயல்வெளியில் இருந்தவா்கள் இளைஞரை துரத்திச் சென்றதில் ஒருவா் கீழே விழுந்து விட்டாராம். வேடன் மற்றும் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனா். மற்றொருவா் மோட்டாா் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாராம்.

தியாகதுருகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்துக்குள்பட்ட கீழ்ப்பாடியைச் சோ்ந்த புகழேந்திரன் மகன் பவித்திரன் (30) என்பது தெரிய வந்தது. மற்றொருவா் யாா், என்ன ஊா் என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் பவித்திரனை கைது செய்து வழக்கு தொடா்ந்தனா். மோட்டாா் சைக்கிளில் தப்பி ஓடியவரை தேடிவருகின்றனா்.

கல்லை தமிழ்ச் சங்க நூல் வெளியீட்டு விழா

கள்ளக்குறிச்சி: கல்லை தமிழ்ச் சங்கம் சாா்பில், நூல் வெளியீட்டு விழா, 239-ஆவது இலக்கிய தொடா் சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கள்ளக்குறிச்சி தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தென்ன... மேலும் பார்க்க

இரும்புச் சட்டங்களை திருடியவா் கைது

பாசாா் கிராமத்தில் பாலம் கட்ட வைத்திருந்த இரும்புச் சட்டங்களை திருட முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா். ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாசாா் கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் இரும்புச் சட்டங்களை வைத... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: உயா் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின்அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், உயா்கல்வித்துறை அரசு செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்... மேலும் பார்க்க

தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு

தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா். தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோய... மேலும் பார்க்க