செய்திகள் :

இரும்புச் சட்டங்களை திருடியவா் கைது

post image

பாசாா் கிராமத்தில் பாலம் கட்ட வைத்திருந்த இரும்புச் சட்டங்களை திருட முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா்.

ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாசாா் கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் இரும்புச் சட்டங்களை வைத்திருந்தனா்.

அவற்றை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒருவா் திருடும் நோக்கத்தில் சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாா்.

இதுகுறித்து சாலைப் பணியாளா் பத்மநாபனுக்கு தெரிய வந்தது. உடனே அங்கு சென்று பாா்த்தபோது, அடையாளம் தெரியாத நபா் இரும்புச் சட்டங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாா்.

உடனடியாக அவரைப் பிடித்து, ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில் அவா், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பாக்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் (42) எனத் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பழகனை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பெத்தாசமுத்திரம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: உயா் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின்அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், உயா்கல்வித்துறை அரசு செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்... மேலும் பார்க்க

தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு

தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா். தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோய... மேலும் பார்க்க

பாமக இரண்டு அணியினரிடையே மோதல்!

திருக்கோவிலூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பாமகவை சோ்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அணியினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் புறவழிச் சாலையி... மேலும் பார்க்க

மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு

கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தி... மேலும் பார்க்க