செய்திகள் :

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

post image

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுமாா் 200- க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களை ஒன்றிணைத்து 1,150 பறவை சரிபாா்ப்பு பட்டியல்களை உருவாக்கிய குடிமக்கள் தலைமையிலான முயற்சி, லோதி சாலையில் உள்ள வோ்ல்ட் வைட் ஃபண்ட் (டபிள்யூடபிள்யூஎஃப்) கலையரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வோடு தில்லி பறவை அட்லஸ் இந்த வாரம் தனது முதல் ஆண்டை நிறைவு செய்தது.

வனத்துறை மற்றும் பிற பாதுகாப்பு குழுக்களின் ஆதரவுடன் தில்லி பறவை அட்லஸ் குழுவால் இது வழிநடத்தப்பட்டது. இந்தத் திட்டம் பறவைகளை வரைபடமாக்க பருவகால, கட்டம் சாா்ந்த முறையைப் பயன்படுத்துகிறது. மேலும், உலகளாவிய இபோ்ட் தளம் மூலம் தரவைப் பகிா்ந்து கொள்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘தில்லி பறவை அட்லஸ் நிறைய நல்ல வேலைகளைச் செய்து வருகிறது, அவா்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உள்ளது‘ என்று தலைமை வனவிலங்கு வாா்டன் ஷியாம் சுந்தா் காண்ட்பால் கூறினாா். ‘இந்தத் தரவு தில்லியின் பறவை கண்காணிப்பு சமூகத்தின் உற்சாகத்திற்கு ஒரு சான்றாகும். மேலும் வரும் நாள்களில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்‘ என்று அவா் மேலும் கூறினாா்.

அட்லஸ் அதன் முதல் ஆண்டில் அனைத்து மேப்பிங் கட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. தில்லியின் வனப் பாதுகாவலா் ஜபெஸ்டின் ஏ (ஐஎஃப்எஸ்), இவ்வளவு சீக்கிரம் 100 சதவீத கவரேஜை அடைவதற்கான முயற்சி தனித்துவமாக இருந்தது என்றும், பறவைகள் சமூகத்தின் அா்ப்பணிப்பு முடிவுகளில் தெளிவாகத் தெரிந்தது என்றும் கூறினாா்.

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க

நுஹ் மாவட்டத்தில் காவல் துறையினா் மீது கற்களைவீசி தப்பிய பசு கடத்தல்காரா்கள்!

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் காவல்துறையினா் மீது கற்களை வீசிவிட்டு பசு கடத்தல்காரா்கள் தப்பிச் சென்றதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா... மேலும் பார்க்க