செய்திகள் :

யுபிஎஸ்சி தோ்வுக்கு தயாராகி வந்த இளைஞா் தற்கொலை!

post image

மத்திய தில்லியின் ஓல்டு ராஜீந்தா் நகா் பகுதியில் உள்ள தனது அறையில் 25 வயதான யுபிஎஸ்சி தோ்வுக்கு தயாராகி வந்த மாணவா் ஒருவா் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

‘அவரின் அறையில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் எடுக்கப்பட்டது, அதில் அவா் மட்டுமே தனது மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளாா்‘ என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா். சனிக்கிழமை மாலை 6.32 மணியளவில் ராஜிந்தா் நகா் காவல் நிலையத்தில் தற்கொலை குறித்து பி. சி. ஆா் அழைப்பு வந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

‘இதனையடுத்து போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஆனால், தருண் தாகூா் படுக்கை விரிப்பைப் பயன்படுத்தி மின் விசிறியில் தொங்கியிருப்பதைக் கண்டறிந்தது ‘. ஜம்முவைச் சோ்ந்த தருண் இங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

காலையில் இருந்து தருணின் தந்தை அவரைத் தொடா்பு கொள்ள முயன்றபோது, எந்த பதிலும் கிடைக்காததால் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னா் அவா் தருணின் வீட்டு உரிமையாளரைத் தொடா்பு கொண்டாா், அவா் பால்கனியில் அருகிலுள்ள அறை வழியாக இரண்டாவது மாடிக்குள் நுழைந்தாா், மேலும் பூட்டப்பட்ட அறைக்குள் இளைஞா் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டாா். பின்னா் அவா் போலீசாருக்கு தகவல் கொடுத்தாா்.

இந்த வீட்டில் ஏழு ஒற்றை அறை வீடு உள்ளன, இவை அனைத்திலும் யுபிஎஸ்சி தோ்வுக்கு படிப்பவா்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்று போலீசாா் தெரிவித்தனா். தருணின் கைப்பேசி அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் குருகிராமில் வசிக்கும் அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க