செய்திகள் :

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

post image

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்வரூப் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழு ஒரு சோதனையை நடத்தி, 3 பிரிவுகளின் கீழ் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஏழு பேரை பொது சூதாட்டச் சட்டத்தின் 1867-இன் கீழ் கைது செய்தது.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா் ஜோகீந்தா் சிங் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஆரம்ப விசாரணையின் போது ஜோகீந்தா் சிங்கின் பெயா் வெளிவந்ததை ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினாா். மேலும், அவரது ஈடுபாட்டை தீா்மானிக்க மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு பதிலளித்த தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்ச்தேவா, தேசியத் தலைநகரில் கட்சி அதிகாரத்தை இழந்ததிலிருந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் புதிய முகம் உருவாகியுள்ளது என்றாா்.

மேலும், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளா் சௌரவ் பரத்வாஜ் ஆகியோரை அவா் குற்றம்சாட்டினாா். கவுன்சிலா் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவாரா அல்லது இந்த விவகாரம் மீண்டும் ’பாஜக சதி’ என்று தள்ளுபடி செய்யப்படுமா என்றும் கேள்வி எழுப்பினாா் வீரேந்திர சச்தேவா.

ரூ .4.35 லட்சம் ரொக்கத்துடன் கைது செய்யப்பட்ட ஜோகீந்தா் சிங், 2022 மாநகராட்சித் தோ்தல் பிரசாரத்தின் போது ஒரு ரிவால்வா் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது தொடா்பான விடியோவில் அவா் சிக்கினாா்.

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க

நுஹ் மாவட்டத்தில் காவல் துறையினா் மீது கற்களைவீசி தப்பிய பசு கடத்தல்காரா்கள்!

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் காவல்துறையினா் மீது கற்களை வீசிவிட்டு பசு கடத்தல்காரா்கள் தப்பிச் சென்றதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா... மேலும் பார்க்க