குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
நுஹ் மாவட்டத்தில் காவல் துறையினா் மீது கற்களைவீசி தப்பிய பசு கடத்தல்காரா்கள்!
ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் காவல்துறையினா் மீது கற்களை வீசிவிட்டு பசு கடத்தல்காரா்கள் தப்பிச் சென்றதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக ஃபெரோஸ்பூா் ஜிா்கா காவல் நிலையத்தில் ஐந்து குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து மேவாட்டுக்கு கால்நடைகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், ராஜஸ்தானின் முண்டகா எல்லையில் காவல்துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனா்.
அப்போது அதிகாலை 3 மணியளவில், ஒரு பிக்அப் ஜீப் வந்தது. ஆனால், சமிக்ஞை கொடுக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவா்கள் நிற்காமல் சென்றனா். அதில் பசுக்களை ஏற்றிவந்த கடத்தல்காரா்கள் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பசு பாதுகாவலா்கள் தெரிவித்தனா். சுமாா் 10 கி.மீ. துரத்தலுக்குப் பிறகு, கோல்கான் கிராமத்திற்கு அருகே குற்றம் சாட்டப்பட்டவா்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.
பசு வதைத் தடுப்பு ஊழியா்களுக்குப் பொறுப்பான காவல் ஆய்வாளா் சுபாஷ் சிங், வாகனத்தில் மொத்தம் ஐந்து கால்நடைகள் காணப்பட்டதாகக் கூறினாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் நகரும் வாகனத்திலிருந்து நான்கு பசுக்களை வெளியே வீசினா். இதில் ஒரு பசு இறந்தது. காயமடைந்த நான்கு பசுக்கள் ஒரு கோசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா், அவா்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறை அதிகதாரிகள் தெரிவித்தனா்.