செய்திகள் :

குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

post image

தென்காசி மாவட்டத்தில் குற்றால சீசனையொட்டி ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா 20-ம் தேதியான நேற்று தொடங்கி 27-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தோட்டக்கலைத் துறை சார்பில் 4 நாள்கள் மலர் கண்காட்சியும் நடைபெறுகிறது.

இந்த எட்டு நாளும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பள்ளியில், கல்லூரி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இதன் தொடக்க நிகழ்ச்சியாக குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் மங்கல இசை மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சியுடன் சாரல் திருவிழாவை வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

வருவாய்த் துறை அமைச்சர்

பின்னர் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மக்களின் நலனிற்காக நிறைவேற்றப்பட்ட பல முக்கிய நலத்திட்டங்கள், முத்திரை பதிக்கும் திட்டங்களைத் தொகுத்து புத்தக வடிவில் தயாரிக்கப்பட்ட நான்கு ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் எனப் பல கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “இந்த ஆண்டு நடைபெறும் சாரல் திருவிழாவானது சாரல் மழையுடன் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

சாரல் திருவிழா துவக்க நிகழ்வு
சாரல் திருவிழா துவக்க நிகழ்வு

இந்த மனுக்களை வாங்குவது பெரிய விஷயம் இல்லை, இந்த மனுக்களுக்கான எதிர்பார்ப்புகளை எங்களால் செய்ய முடியும் என்ற காரணத்தினால் செய்து வருகிறோம். அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலினை நடத்துவதற்கு தமிழக முதல்வருக்குத் தைரியம் இருக்கின்ற காரணத்தினால் செய்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

மேலும் சாரல் திருவிழா நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Trump: `ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோ' - ட்ரம்ப் சொல்ல வருவது என்ன?

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவைப் பகிர்ந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அந்த வீடியோ பராக் ஒபாமா, "அதிபர் சட்டத்துக்கு மேலானவர்" எனக் கூறுவதைப் போலவும், அதற்கு அமெரிக்... மேலும் பார்க்க

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா... கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக! - தகிக்கும் அரசியல் களம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் இவர்.அன்வர் ராஜாவும், பாஜக உடனான கூட்டணியும்! அடுத்த ஆண்டு த... மேலும் பார்க்க

Shashi Tharoor: `அவர் கங்கிரஸாரில் ஒருவரா?’ - சசி தரூர் விசுவாசத்தை கேள்வி கேட்ட மூத்த தலைவர்

கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளிதரன், காங்கிரஸ் எம்.பி சசி தரூரை மீண்டும் தாக்கி பேசியிருக்கிறார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சசி தரூர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை அவர் காங்கிரஸில்... மேலும் பார்க்க

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மகா. அமைச்சர்? பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் இரண்டு வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்ற கூட்... மேலும் பார்க்க

அதானியின் நிலக்கரி திட்டம்: `ஆபத்தாக மாறும் புனித நீரூற்று' - ஆண்டுகள் கடந்தும் எரியும் நெருப்பு!

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று குயின்ஸ்லாந்து. இந்தப் பகுதியில்தான் தூங்கமபுல்லா நீரூற்றுகள் உள்ளன. இந்த நீரூற்று நீர், நிலம், உயிர்களை உருவாக்கும் கடவுள் சக்தியுடன் தொடர்புடைய முண்டகு... மேலும் பார்க்க