செய்திகள் :

Trump: `ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோ' - ட்ரம்ப் சொல்ல வருவது என்ன?

post image

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவைப் பகிர்ந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

அந்த வீடியோ பராக் ஒபாமா, "அதிபர் சட்டத்துக்கு மேலானவர்" எனக் கூறுவதைப் போலவும், அதற்கு அமெரிக்க அரசியல்வாதிகள் "யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது" எனக் கூறுவதைப் போலவும் தொடங்குகிறது.

பின்னர் ஓவல் அலுவகத்திலேயே இரண்டு FBI ஏஜென்ட்கள் ஒபாமாவைக் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதை அதிபர் ட்ரம்ப் பார்த்து சிரிப்பதுபோல AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ வருகிறது.

இந்தப்போலி வீடியோவில் ஒபாமா கைதிகளுக்கான ஆரஞ்சு உடையுடன் கம்பிகளுக்குப் பின்னால் அமர்ந்திருப்பதாகவும் காட்டப்படுகிறது.

இந்த வீடியோ அமெரிக்க அரசியலில் புழுதியைக் கிளப்பியிருக்கிறது. பலரும் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதை அதிபர் ட்ரம்ப் குறிப்பிடவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர். அவர் 'பொறுப்பில்லாமல்' நடந்துகொள்கிறார் என விமர்சித்தனர்.

கடந்த வாரம் ஒபாமாவை, "மிகப் பெரிய தேர்தல் மோசடிக்காரர்" என ட்ரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துளசி கபார்ட்

மேலும் கடந்த வாரம் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட், 2016 தேர்தலில் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்க ஒபாமா மற்றும் அவரது அதிகாரிகள் ட்ரம்ப்புக்கு ரஷ்யாவுடன் தொடர்பு இருப்பதாக ஒரு தியரியை உருவாக்கியதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் ஒபாமாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

"டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பராக் ஒபாமா மற்றும் அவரது உயர் மட்ட அதிகாரிகள் 2016ம் ஆண்டு உளவுத்துறையை தங்களது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது அமெரிக்க மக்களின் விருப்பத்துக்கு மாற்றான, நம் இறையாண்மையை குறை மதிப்புக்கு உள்ளாக்கும் செயல்" என எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார் துளசி கபார்ட்.

கடந்த 2016ம் ஆண்டு, பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் தேசிய உளவு இயக்குநரகம் வெளியிட்ட 114 பக்க ஆவணங்கள் "ரஷ்யாவின் சைபர் முயற்சிகளால் அமெரிக்க தேர்தல் பாதிக்கப்படவில்லை" எனத் உறுதியாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'முதலமைச்சர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்' - தமிழிசை சௌந்தரராஜன்

லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!' - உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள... மேலும் பார்க்க

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்' - அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அபோல்லோ மருத்துவமனை அறிக்க... மேலும் பார்க்க

`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி

"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நி... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில்: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு? குவியும் புகார்கள்; புலனாய்வுக் குழு அமைப்பு

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.தூய்மைப் பணியாளரின் புகார் கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில்... மேலும் பார்க்க