செய்திகள் :

தர்மஸ்தலா கோயில்: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு? குவியும் புகார்கள்; புலனாய்வுக் குழு அமைப்பு

post image

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.

தூய்மைப் பணியாளரின் புகார்

கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில் முன்னாள் தூய்மைப் பணியாளர் பரபரப்பு புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில்
கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில்

அதில், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள்.

இதை நான் செய்யவில்லை என்றால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.

கடந்த 11-ம் தேதி, இவர் பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, சில எலும்புகளையும் கொண்டு வந்திருந்தார்.

தாய் புகார்

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி, 2003-ம் ஆண்டு, தன் மகள் தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக பெண் ஒருவர் தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கர்நாடகா முழுவதும் பரவலான கோரிக்கை எழுந்தது.

பாலியல் புகார்
பாலியல் புகார்

சிறப்பு புலனாய்வுக் குழு

இதனையடுத்து, நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் டி.ஜி.பி ப்ரோனாப் மொஹந்தி, டி.ஐ.ஜி எம்என் அனுசேத், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எஸ்கே சௌமிலதா, ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கு குறித்த எஃப்.ஐ.ஆரையும், கர்நாடகா முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், இதே மாதிரி பதிவாகி உள்ள வழக்குகளையும் இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும்.

இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று மஞ்சு நாதர் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - என்ன நடந்தது?

நடைப்பயிற்சியின் போது...தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைபாடு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதல்வருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிவாலய மற்றும் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Achuthanandan: கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான அச்சுதானந்தன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். வயது... மேலும் பார்க்க