செய்திகள் :

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

post image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நம் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, மக்களின் ஆதரவுடன் புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

ஆனாலும் கட்சி ஒரு அமைப்பாக இல்லையே என்ற ஒரு குறை மட்டும் இருந்தது. தற்போது பல்வேறு அணிகளும், அதற்கான தலைவர்களையும் நியமித்திருப்பதன் மூலம் அந்தக் குறை சரி செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ரூ.13,500/- கோடிக்கு போடப்பட்ட பட்ஜெட்டில் 99% சதவிகிதப் பணிகளை முடித்துவிட்டோம். 5,000 அரசுப் பணியிடங்களை நிரப்பியிருக்கிறோம். விரைவில் 2026 சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கிறது. நல்லது செய்பவர்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

அதனால் நாம் செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளர் தோல்வியை சந்தித்தது உண்மைதான். அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு.

அதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் நாம் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம். எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கும், எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. கண்டிப்பாக அனைத்துக்கும் பதிலளிப்போம். யாருக்காகவும் நாம் பயந்து போய் இல்லை.

தற்போதைய சூழலில் நாம் மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியமான ஒன்று. அதை வலியுறுத்துவது நம் கடமை. மாநில அந்தஸ்தை பெற்றுவிட்டால் நிர்வாகத்தில் நாம் இன்னும் விரைவாகப் பணியாற்ற முடியும். நம் அரசு கேட்கும் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதை செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி நம்மிடம் இருந்தாலும், அதிகாரம் ஆளுநரிடத்தில்தான் இருக்கிறது. நாம் எதை செய்ய வேண்டும் என்றாலும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமான ஒன்று. அந்த ஒப்புதலுக்கு காலதாமதம் ஏற்பட்டால், நம்மால் விரைவாக திட்டங்களை நிறைவேற்ற முடியாது.

தடைகளும், குழப்பங்களும் ஏற்படும். அப்படி எதுவும் நடக்காமல், திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெற வேண்டும் என்றால் நமக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்” என்றார்.

திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் ... மேலும் பார்க்க

'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் ... மேலும் பார்க்க

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவம... மேலும் பார்க்க

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க