செய்திகள் :

'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

post image

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் முறையாக தவெக சார்பில் அதிமுகவை அட்டாக் செய்யும் வகையில் பேசியிருந்தார்.

ஆதவ்
ஆதவ்

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'திமுக பேசிப் பேசி வளர்ந்த கட்சி. ஆனால், இன்று அவர்களிடம் பேசுவதற்கு ஆளே இல்லை. கமிஷன், கட்டிங், ஷேர் என திமுக மாறிவிட்டது. தீய சக்தி திமுக, ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது என்பதை உணர்ந்து எம்.ஜி.ஆர் அதிமுகவை எப்படி தொடங்கினாரோ, அதே உணர்வில்தான் தலைவர் தவெகவை தொடங்கியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் இருக்கும்போது பெரியாரியம் மார்க்சியம் என எல்லாவற்றையும் பேசுவார்கள்.

ஆளுங்கட்சி ஆனவுடன் கொள்ளையை மட்டுமே கொள்கையாக கொண்ட அமைச்சர்களையும் ஒரு குடும்பத்தையும் உருவாக்குவார்கள். அதுதான் கலைஞரின் வெற்றி. கலைஞர் கூட பெரியாருடைய கொள்கையில் ஒத்துப்போவார். இன்றைய முதல்வருக்கு கொள்கையே கிடையாது. வெறும் ஊழல் மட்டும்தான். செந்தில் பாலாஜி என்ன பெரியாரிஸ்ட்டா? எ.வ.வேலு என்ன மார்க்சியவாதியா? திமுகவுடைய ஊழல்கள்தான் பாஜகவை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

Aadhav Arjuna
Aadhav Arjuna

ஜெயலலிதா மோடியா லேடியா எனக் கேட்டார். ஆனால், இப்போது அதிமுக பாஜகவை பின்புறம் வழியாக அனுமதித்து கூட்டணி வைத்திருக்கிறது. அந்த கூட்டணிக்கு தலைமை யார் என்றே தெரியவில்லை. சி.எம் யாரென்றால் அதை அமித் ஷாதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள். அதிமுகவின் தலைமை வலுவிழந்துவிட்டது.

அதிமுக தொண்டர்கள் தவெகவில் எப்போதோ இணைந்துவிட்டார்கள். அதனால்தான் அதிமுகவை நாங்கள் எதிர்க்கவில்லை.

எம்.ஜி.ஆர் எந்தக் குறிக்கோளோடு அதிமுகவை தொடங்கினாரோ, ஜெயலலிதா எந்த குறிக்கோளோடு அதிமுகவை மீட்டெடுத்தாரோ அந்த குறிக்கோளின் இன்றைய நம்பிக்கை தலைவர் விஜய். அதிமுகவின் கொள்கையற்ற அரசியலால்தான் திமுக மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்றது.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இனிமேல் திமுகவால் வெல்ல முடியாது. ஏனெனில், உங்களை எதிர்த்து அரசியல் செய்வது பாஜகவிடம் சரணடைந்தவர்கள் அல்ல. பாஜகவை கொள்கை எதிரியாக கொண்டவர்கள். இஸ்லாமிய தோழர்களே குரான் மீது ஆணையாக சொல்கிறோம். நாங்கள் ஒரு போதும் பாஜகவோடு கூட்டணிக்கு செல்லமாட்டோம்.காமராஜர் அவர்கள் கலைஞரின் கையைப்பிடித்து ஜனநாயகத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்றாராம். இரண்டு பேருமே இன்று உயிரோடு இல்லை. திமுக பொய்யை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸில் திருச்சி வேலுசாமி மட்டும்தான் தன்மானத்தோடு திமுகவை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறார். காங்கிரஸை திமுக உயிரோடு விழுங்கிக் கொண்டிருக்கிறது. காமராஜரை தொட்டால் காங்கிரஸ் வருகிறதோ இல்லையோ தவெக வரும்.' என்றார்.

திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் ... மேலும் பார்க்க

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவம... மேலும் பார்க்க

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க