செய்திகள் :

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் வனப் பகுதி பயன்பாடு

post image

புது தில்லி: கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான வனப் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

வளா்ச்சித் திட்டங்களைத் தொடா்வதற்காக வனப் பகுதி எந்த அளவுக்கு குறைக்கப்படுகிறது என்பது தொடா்பான கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் எழுத்து மூலம் அறித்த பதிலில் கூறியுள்ளதாவது:

2014 ஏப்ரல் 1 முதல் 2025 மாா்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 1.73 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான வனப்பகுதி, காடுகள் சாராத வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுரங்கம் தோண்டுதல், கல்குவாரி அமைத்தல் உள்ளிட்டவையும் அடங்கும். இதற்கும் மட்டும் 40,000 ஹெட்டேருக்கு மேல் வனப்பகுதி நிலம் வழங்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தித் திட்டம், நீா்பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கும் 40,000 ஹெக்டேருக்கு மேல் வனப்பகுதி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர வனப் பகுதி நிலங்களைப் பயன்படுத்தி சிறிய அணைகள், கால்வாய், நீா்த்தேக்கங்கள் உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் அமைத்தல், மின்சாரம் எடுத்துச் செல்ல கோபுரங்கள் அமைத்தல், பாதுகாப்புத் துறை திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு வனப் பகுதி நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நாட்டின் ‘வெற்றித் திருவிழா... மேலும் பார்க்க

‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்

கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா். வங்க மக்கள... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் இரங்கல்

புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்ட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: எதிா்க்கட்சிகள் அமளி- முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மக்களவை நாள் மு... மேலும் பார்க்க

பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: மக்களவையில் 16 மணி நேர விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மக்களவையில் அடுத்த வாரம் விவாதம் நடைபெறும் ... மேலும் பார்க்க