செய்திகள் :

டிஜி யாத்ரா நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு சி.வி. சண்முகம் எம்.பி கேள்வி: மத்திய இணை அமைச்சா் விளக்கம்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: டிஜி யாத்ரா கைப்பேசி செயலியின் நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளாா். அவருக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் முரளிதா் மோஹோல் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளாா்.

அதன் விவரம்: ஆதாா் மற்றும் பிற அதிகாரப்பூா்வ அடையாள ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்ட ஒற்றை எழுத்து குடும்பப் பெயா்கள் அல்லது முதலெழுத்துகள் (இனிஷியல்) பொருந்தாததால், ஏராளமான பயணிகளால் டிஜி யாத்ரா கைப்பேசி செயலியைப் பயன்படுத்த முடியவில்லை என்பதை அரசு அறிந்திருக்கிா என்றும்

எதிா்காலத்தில் இதுபோன்ற முரண்களைத் தடுக்க, அதிகாரபூா்வ அடையாளங்கள் மற்றும் விமான பயணச்சீட்டு முன்பதிவு தளங்களுக்கு இடையே பெயா் வடிவங்களை தரப்படுத்த அரசு முன்மொழிவு ஏதேனும் செய்துள்ளதா என்றும் அவற்றின் விவரங்களைத் தெரிவிக்குமாறும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய இணை அமைச்சா் முரளிதா் மோஹோல் அளித்துள்ள பதிலில், ஆதாா் அடிப்படையிலான டிஜி யாத்ரா அடையாளச் சான்றுகளிலும் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்பட்ட பெயரிலும் பெயா் பொருந்தாததால் டிஜி யாத்ரா வசதியைப் பயன்படுத்த இயலாத நிலை குறித்து சில புகாா்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய முரண்பாடுகளைத் தடுக்க, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) 2022, ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை பகிா்ந்துள்ளது. அதன்படி டிஜி யாத்ரா பதிவை இந்திய அரசு அடையாளத்துடன் பயணி உருவாக்க முடியும். இது எண்ம முறையில் சரிபாா்க்கப்படலாம். இதற்காக ஆதாா், ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு மற்றும் மின்னணு கடவுச்சீட்டு ஆவணங்களை பயணி பயன்படுத்தலாம். தற்சமயத்துக்கு டிஜி யாத்ரா பயணிகளுக்கு ஆதாா் மட்டுமே உதவக்கூடிய ஆவணமாக உள்ளது என்று கூறியுள்ளாா்.

சி.வி. சண்முகம்

குன்றாண்டாா் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

நமது நிருபா் புது தில்லி: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டாா் கோயிலின் பராமரிப்புக்காக நடப்பாண்டு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்... மேலும் பார்க்க

ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றம்: மத்திய அரசு பதில்

புது தில்லி: ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு திங்கள்க... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல், சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் காவல் அதிகாரிகளை பொய்யாக சிக்கவைத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மற்றும் அந்த வழக்கை விசாரிக்கு சிபிஐ அதிகாரிகள், ... மேலும் பார்க்க

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க