செய்திகள் :

ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றம்: மத்திய அரசு பதில்

post image

புது தில்லி: ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை பதில் அளித்துள்ளது.

இது தொடா்பாக கள்ளக்குறிச்சி எம்பி டி.மலையரசன் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம் வருமாறு:

ராஷ்ட்ரிய உச்சதா் சிக்ஷா அபியான் (ரூசா) என்பது மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். குறிப்பிட்ட மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலமும், அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலமும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது.

2023-24 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில், கல்வி ரீதியாக சேவை பெறாத, தகுதிபெறாத பகுதிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக, ரூசாவின் முந்தைய கட்டத்தின் உறுதியான பொறுப்புகள் உட்பட ரூ. 12926.10 கோடி செலவில் பிஎம்-உஷா திட்டத்தின் கீழ்

ஜூன் 2023-இல் ராஷ்ட்ரிய உச்சதா் சிக்ஷா அபியானின் (ரூசா) மூன்றாவது கட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இதுவரை, மாநிலத்தால் வழங்கப்பட்ட தகவல்களின்படி, தமிழ்நாட்டில் ரூசா திட்டத்தில் பல்வேறு கூறுகளின் கீழ் மொத்தம் 99 திட்டங்கள் ரூ.526 கோடி மொத்த மத்திய நிதியுதவியுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 85 திட்டங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன.

2025-26 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25.5 கோடியாகும்.இது ரூசாவின் முந்தைய கட்டங்களின் உறுதியான பொறுப்புகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜி யாத்ரா நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு சி.வி. சண்முகம் எம்.பி கேள்வி: மத்திய இணை அமைச்சா் விளக்கம்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: டிஜி யாத்ரா கைப்பேசி செயலியின் நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கே... மேலும் பார்க்க

குன்றாண்டாா் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

நமது நிருபா் புது தில்லி: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டாா் கோயிலின் பராமரிப்புக்காக நடப்பாண்டு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல், சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் காவல் அதிகாரிகளை பொய்யாக சிக்கவைத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மற்றும் அந்த வழக்கை விசாரிக்கு சிபிஐ அதிகாரிகள், ... மேலும் பார்க்க

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க