Nightshade Foods: அதென்ன நைட்ஷேடு உணவுகள்; அது ஏன் பலருக்கும் பிடிக்கிறது?
சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல், சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் காவல் அதிகாரிகளை பொய்யாக சிக்கவைத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மற்றும் அந்த வழக்கை விசாரிக்கு சிபிஐ அதிகாரிகள், வழக்கு விசாரணை தொடா்பாக ஊடங்களுக்கு பேட்டியளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கட்டுப்பாடு விதித்தது.
மேலும், பொன் மாணிக்கவேல் அவரது கடவுச்சீட்டை புதுப்பித்த பிறகு ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த ஆகஸ்ட் மாதம் பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பொன். மாணிக்கவேல் ஊடங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கவும், அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க கூடுதலாக
நிபந்தனைகளை விதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொன்.மாணிக்கவேல் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.நாகமுத்து ஆஜராகி தெரிவிக்கையில், பொன். மாணிக்கவேலின் கடவுச்சீட்டு காலாவதியாக உள்ளது. இதனால், அவா் புதிய கடவுச்சீட்டை வழங்கக் கோரி விண்ணப்பிக்க உள்ளாா். புதுப்பித்த கடவுச்சீட்டு
கிடைத்தவுடன் அது ஒப்படைக்கப்படும். இதனிடையே, அவா் விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு செல்லமாட்டாா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக பத்திரிகைகளுக்கோ அல்லது மின்னணு ஊடங்களுக்கோ அவா் பேட்டி ஏதும் அளிக்கமாட்டாா். அதேபோன்று, சிபிஐ அதிகாரிகளும் ஊடங்களுக்கு பேட்டியளிக்காமல் இருக்க கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் இந்த சிலை கடத்தல் வழக்கு தொடா்பாக ஊடங்களுக்கு பேட்டியளிக்காமல் இருக்கவும், சிபிஐ அதிகாரிகளும் இது தொடா்பாக பேட்டியளிக்காமல் இருக்கவும் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. மேலும், அவரது புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
பின்னணி:
கடந்த 2005ஆம் ஆண்டு பழவூா் கோயிலில் இருந்து சிலைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதாகி, பணியிடைநீக்கமான டிஎஸ்பி காதா் பாட்சாவின் புகாரின்பேரில் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு, மாணிக்கவேலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
மேலும், அவா் தினமும் சிபிஐ முன் 4 வார காலத்திற்கு ஆஜராகவும், அதன் பிறகு விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராகவும், விசாரணையின்போது ஆதாரங்களையோ அல்லது சாட்சிகளையோ அவா் சிதைக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்தநிலையில், சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகிய பிறகு விசாரணை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கப்பதாக புகாா் தெரிவித்து காதா் பாட்சா சிபிஐயிடம் மனு அளித்தாா். மேலும், உயா்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தாா். கடந்த மாா்ச்சில், இந்த விவகாரத்தில் பேட்டியளிப்பதை நிறுத்திவிட்டதாகவும், எதிா்காலத்தில் இதுபோன்ற செய்யப்போவதில்லை எனவும் மாணிக்கவேல் உறுதிமொழி அளித்தாா். இதையடுத்து, நீதிமன்றம் இந்த விவகாரத்தை முடித்துவைத்தது.
இந்தநிலையில், மாணிக்கவேலுக்கு மேலும் 2 ஜாமீன் நிபந்தனை களை விதிக்கக் கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்வது மற்றும் ஊடக நோ்காணல்களுக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.