செய்திகள் :

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

post image

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தீடிரென நேற்று அறிவித்தார். மேலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, பரிசோதனை செய்துகொண்டு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், பதவியை ராஜிநாமா செய்வதாக, ராஜிநாமாவுக்கான உரிய விளக்கத்துடன் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தன்னுடைய ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை அவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்திருப்பது விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இன்று (அதாவது நேற்று - ஜூலை 21) மாலை 5 மணி வரை பல எம்பிக்களுடன் நானும் அவருடன் இருந்தேன். இரவு 7.30 மணிக்கு அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

ஜகதீப் தன்கர் அவருடைய உடல்நலத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில், எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், திடீரென ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இருப்பினும், இது யூகங்களுக்கான நேரம் அல்ல.

தன்கர் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சமமாக நடத்தினார். நாளை மதியம் 1 மணியளவில் வணிக ஆலோசனைக் குழு கூட்டத்துக்கும் திட்டமிட்டிருந்தார். நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் நாளை(அதாவது இன்று - ஜூலை 22) வெளியிடவிருந்தார்.

அவர் நலமுடன் இருக்க வாழ்த்துகிறோம். மேலும், அவர் தன்னுடைய ராஜிநாமா முடிவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரதமரும் தன்கரிடம் கூறி முடிவை மாற்றுவார் என நம்புகிறோம். நாடு விரும்புவதும் அதுதான்” எனப் பதிவிட்டுள்ளார்.

Congress has appealed to Vice President Dhankhar to reconsider his resignation decision.

இதையும் படிக்க :பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு

நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்! மக்கள் பணம் வீணாவதாக மத்திய அமைச்சர் காட்டம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிர... மேலும் பார்க்க

சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!

மறைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.கேரளத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய... மேலும் பார்க்க

செல்போன் பழக்கத்திலிருந்து விடுபட டிப்ஸ்! உண்மை கசக்கத்தான் செய்யும்!!

புகைப்பழக்கத்தைவிடவும், செல்போன் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு கடினமாம், முடியாமல் போகும் வாய்ப்பு அதிகமாம், சாத்தியமாவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள்.ஒருநாளைக்கு சராசரி... மேலும் பார்க்க

2006 குண்டுவெடிப்பு: லஷ்கரா-முஜாகிதீனா? பாத்திரமா-குக்கரா? விடை காணாத வினாக்கள்!

மும்பை: 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, இன்னமும் பல கேள்விகளுக்கு விடை காணாமலேயே இருப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 2 வரை ஒத்திவைப்பு!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட... மேலும் பார்க்க

ஜகதீர் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகள்! - பிரதமர் மோடி

ஜகதீப் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “இந்தியாவ... மேலும் பார்க்க