செய்திகள் :

2006 குண்டுவெடிப்பு: லஷ்கரா-முஜாகிதீனா? பாத்திரமா-குக்கரா? விடை காணாத வினாக்கள்!

post image

மும்பை: 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, இன்னமும் பல கேள்விகளுக்கு விடை காணாமலேயே இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 2006, ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 180 போ் பலியாகினர். பலா் படுகாயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவர்கள் என்று 12 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தியது. கைது செய்யப்பட்ட 12 பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் (சிமி) சோ்ந்தவா்கள் என்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஏடிஎஸ் குற்றஞ்சாட்டியது.

அது மட்டுமல்ல, குண்டுவெடிப்புக்கு சமையலறை பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஏடிஎஸ் விசாரணையின்போது கூறியிருந்தது.

இதற்கு முரணாக, விசாரணைத் தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பின், மும்பை குற்றவியல் பிரிவு காவல்துறை, இந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் பாணியில் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது.

அது மட்டுமல்ல, விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோதுதான், பிஷர் குக்கரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

சரி அவ்வாறே பிரஷர் குக்கர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஏடிஎஸ் வாதத்தை எடுத்துக் கொண்டாலும் கூட, அதில் சில கேள்விகள் எழுகின்றன. அதாவது, பயங்கரவாதிகள், இந்த குக்கர்களை எந்தக் கடையிலிருந்து வாங்கினர், அந்தக் கடையின் உரிமையாளரிடம் விசாரிக்கப்பட்டதா, அவர் சொன்ன தகவலின் அடிப்படையில், குக்கர் வாங்கியவரின் முகம் வரையப்பட்டு, வெளியிடப்படாதது ஏன்? என்பதுதான் அது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து குக்கர் மற்றும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும், அவரது வாக்குமூலத்தில் அது தொடர்பான ஒரு தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை.

மற்றொரு குற்றவாளியின் வாக்குமூலத்தில் ஆர்டிஎக்ஸ், டைமர் போன்றவை வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் பிரஷர் குக்கர் பற்றி குறிப்பிடப்படவில்லை.

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரையில் விபத்து: பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள அமர்நாத் புனித தலத்துக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற ஒரு பேருந்து இன்று(ஜூலை 22) பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து பக்தர்கள் காயமடைந்தனர். அதனைத்தொடர்... மேலும் பார்க்க