செய்திகள் :

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

post image

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தகுதியற்றவர் எனக் கண்டறியப்பட்டால், அந்த நபரின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 24ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் காரணமாக, வாக்காளர்கள் பெரிய அளவில் நீக்கப்படலாம் என்றும், அதனை எதிர்த்தும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஆதார் அட்டையானது குடியுரிமையை நிறுவாததால், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், ஆதார் அடையாளச் சான்றாக மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிறப்பு திவிர திருத்தப் பணிகளில் நோக்கமே, தகுதியற்ற நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் தேர்தலின் தூய்மையை அதிகரிப்பதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க

வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம்! - ராம்தாஸ் அத்வாலே பேச்சு

வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திமுகவின... மேலும் பார்க்க

தேர்தல் ஆணைய மோசடியை கையும் களவுமாகப் பிடித்துள்ளோம்.. தப்பிக்க முடியாது: ராகுல்

கர்நாடகத்தில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்ததற்கான 100 சதவீதம் ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற ம... மேலும் பார்க்க

ரஷிய விமான விபத்து: 49 பேரும் பலி!

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேர் பலியாகினர்.பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் இருந்து தைண்டா நகரை நோக்கி உள்ளூர் நேரப்படி பகல் 1 மணிக்கு அங்காரா ஏர்லைன்ஸின் ... மேலும் பார்க்க

ஹிமாசலை புரட்டிப்போட்ட பருவமழை: 137 பேர் பலி, 311 சாலைகள் துண்டிப்பு!

ஹிமாசல பிரதேசத்தில் இடைவிடாத பெய்துவரும் பருவமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 311 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்... மேலும் பார்க்க