செய்திகள் :

சிரியா - சவுதி அரேபியா இடையில் ரூ. 52,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

post image

சிரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுமார் ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பில், 47 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் அஹமது அல்-ஷரா தலைமையிலான இடைக்கால அரசு 7 மாதங்களுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் சூழலில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்த அந்நாட்டை மீண்டும் கட்டமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய, சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.51.8 ஆயிரம் கோடி) மதிப்பீட்டில் 47 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம், வீட்டு மனைகள், போரினால் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தல், சுற்றுலா மேம்பாடு, மருத்துவமனைகள், பொழுதுபோக்குத் தலங்கள் மற்றும் 3 சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிரியாவின் தகவல் துறை அமைச்சர் ஹம்ஸா அல்-முஸ்தஃபா கூறுகையில், இந்தத் திட்டங்களின் மூலம் சுமார் 50,000 பேருக்கு நேரடியாகவும், 1,50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில், கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் வெற்றிப் பெற்று, அதிபர் அஹமது அல்-ஷரா தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல், சவுதி அரேபியா அரசு சிரியாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.

2017-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், போரினால் கடுமையாகப் பாதிப்படைந்த சிரியாவை மீண்டும் கட்டமைத்து உருவாக்க சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அந்நாட்டை மறுசீரமைக்க சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் செலவாகும் என நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தாய்லாந்து - கம்போடியா சண்டைக்குக் காரணம் ஒரு ஹிந்துக் கோவிலா?

It has been announced that 47 investment agreements worth approximately Rs. 52 thousand crore will be signed between Syria and Saudi Arabia.

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க

வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேர... மேலும் பார்க்க