செய்திகள் :

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

post image

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுடன், ஈரான் அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த, ஈரானின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் தக்த் - ரவஞ்சி மற்றும் சட்டம், சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசெம் கரிபாபாடி ஆகியோர் தலைமையிலான குழுவினர், இஸ்தான்புல் நகரத்துக்குச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அந்த 3 நாடுகளும் ஈரான் அரசு மற்றும் அதன் அணுசக்தி மீதான தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக, இரானின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்கவும், அவர்களது அணுசக்தி திட்டத்தின் மீதான சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் முயற்சிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, அணுசக்தியின் மூலப் பொருளான யுரேனியம் சேகரிப்பிற்கான ஈரானின் நிலைப்பாட்டை, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மீண்டும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் ஈரான் மற்றும் இ3 நாடுகள் இடையில் 6 சுற்றுகளாக அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

முன்னதாக, ஜூன் 13 ஆம் தேதி, ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதனால், இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

Nuclear talks between the E3 countries and Iran have reportedly begun today (July 25) in Turkey.

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க