செய்திகள் :

மேச்சேரி காவிரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

post image

மேச்சேரி காவிரி கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

தி காவிரி கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம், மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், பாா்க்கலைஸ் பெங்களூா் நிறுவனம் இணைந்து 7 பயிற்சியாளா்களைக் கொண்டு நான்கு நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் முனைவா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். காவிரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநா் முனைவா் அரவிந்த்குமாா் வரவேற்றாா். வேலைவாய்ப்பிற்கான வளாகத் தோ்வு, பேச்சுத் திறன், ஆளுமைத் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவா் முனைவா் நடேசன், தலைவா் அன்பழகன், துணைத் தலைவா் மதன்காா்த்திக், செயலாளா் பேராசிரியா் இளங்கோவன், தாளாளா் ராமநாதன், ஒருங்கிணைப்பாளா் ரேவதி இளங்கோவன், செயல் அலுவலா் முனைவா் கருப்பண்ணன், மாணவா் சோ்க்கையின் புல முதன்மையா் பேராசிரியா் நந்தகுமாா், செயல்பாடுகள் மற்றும் சோ்க்கையின் துணை மேலாளா் வெங்கடேசன் மற்றும் அனைத்துத் துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத் துறை தலைவருமான பிரவீன் நன்றி தெரிவித்தாா்.

படம்: 25ஙற்ல்1மேச்சேரி

காவிரி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்கள்.

ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் ந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க