செய்திகள் :

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

post image

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.

அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, த்ரெட்ஸ்) அரசியல், தேர்தல், சமூக பிரச்சினைகள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் விரைவில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மட்டுமே நடைமுறைக்கு வரவுள்ளது.

டிக்டாக் செயலியில் பதிவிடப்பட்ட போலியான தகவல்களை அடங்கிய விடியோவால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமான ரோமானியாவில் கடந்த டிசம்பரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

இந்தநிலையில், தேர்தல் நடைபெறும்போது தவறான தகவல்களை பரப்பப்படுவதை தடுக்கவும் வெளிநாட்டு சக்திகள் பல குறுக்கீடு செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், அரசியல் தொடர்பான பதிவுகளுக்கு கட்டுப்பாடு விதித்து ஐரோப்பிய ஒன்றியத்தால் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுக்க மெட்டா தீர்மானித்துள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் மெட்டா தளங்களை பயன்படுத்துவோர் அவற்றில் அரசியல் தொடர்பான கருத்துப் பதிவுகள், விவாதங்கள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் கூகுள் நிறுவனம் எடுத்திருந்த இதே பாணியிலான நடவடிக்கையை இப்போது மெட்டாவும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Meta – which owns Instagram, Facebook, Threads and Whatsapp will stop all advertisement about politics, elections and social issues on its platforms in the EU

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க